Wednesday 1st of May 2024 05:43:42 PM GMT

LANGUAGE - TAMIL
.
பேருந்து கட்டண குறைப்பு தொடர்பில் அமைச்சர் பந்துல குணவர்தன விளக்கம்!

பேருந்து கட்டண குறைப்பு தொடர்பில் அமைச்சர் பந்துல குணவர்தன விளக்கம்!


பேருந்து கட்ணம் நேற்று நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தன விளக்கமளித்துள்ளார்.

பேருந்து கட்டண குறைப்பு தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன, கொவிட் காலத்தில் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு மாத்திரம் பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக, பேருந்து கட்டணம் 20 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.

ஆனால், தற்போது கொவிட் பரவல் நிலை இல்லாதமையால், பேருந்தில் பயணிகள் நின்றவாறும் பயணிக்கின்றனர்.

எனவே, அதிக கட்டணத்தை செலுத்திய பயணிகளுக்கு அந்தக் கட்டணம் குறைவடைய வேண்டும்.

அதனை, போக்குவரத்து ஆணைக்குழு குறைத்து தமது அனுமதியை மாத்திரம் பெற்றுக்கொண்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE